எத்தனைமுறை நான் சித்தமெடுத்துனைக்கத்திய ழைத்தாலும்நித்தம் வருந்துயர் மொத்த மழித்துமுய்வித்து விடென்றாலும்முத்தமிழின் இறை சித்திதரும் அருள்அத்தனையும் ஈந்தாய்பத்தியுடன் உனை நித்தமும் தொழுதிடஇத்தரை வாழ்ந்திடுவேன்மத்தை யெடுத்திடல் போலும் கொடும் அர-வத்தை யெடுத்து மமு-தத்தைக் கொளக் கடைந்திட்ட போதேஉயிர்சத்தை அழிக்கும் விடம்மொத்தமெனத் திரள்கண்டுமே அஞ்சவி-டத்தை குடித்தவரின்புத்திரனே மனம் கொண்டருள் கேட்டேன்புத்தொளிர் வாழ்வீயாய்பத்தை யெடுத்துடன் பார்விழி நாலிடைப்பாதியும் சேர்குமராவித்தகனில் வெறும் கையுடன் முன்னால்கத்தலை யெழும்சாக-ரத்திடை வீழ்ந்தவ னாகியும் தப்பிடஎத்திசை நீந்தலெனஇத்திசை என்றொளி முன்னுவந் தீந்தாய்அத்தனையருள் நினதேசொத்தென ஏதுமே பொற்கலயம்நிறைமுத்தொளி இரத்தினமில்உத்தமனே வடிவேலவனே உனைநித்தமும் தொழுமென்னைசுத்தமெனும் மனதோடு நிறைகுணம்புத்தி தெளிந் துயரநித்தியமாகிட நிம்மதிகண்டுமின்-பத்தை யெடுத்திட வை !!
Tuesday, 7 October 2014
முருகா ,உருகும் மனம்
Monday, 6 October 2014
எங்கு சென்றாய் மகளே
மழைகொண்ட உறவுக்கு மரமென்றும் நினைவாக
மண்ணிலே நீரைத் தேடும்
களை கொண்ட பயிரன்பு கயமைக்கு பொருளாகும்
கரங்களால் அழிந்துபோகும்
முளை கொண்டு வளர்கின்ற சமுதாயத் தோட்டத்தில்
மகளே வா நீயும் நானும்
பிழை என்றுஎது கொண்டு பிரிவென்று வந்ததோ
பதில் கண்டதில்லை இன்றும்
பிரிவென்ப மாறாத நியதிதான் இருந்தாலும்
பேசற்ற நிலைமை போதும்
பரிவென்ப மனம் கொள்ளும் பரிசென்றபோது மேன்
படையற்ற போரும்காணும்
வரியன்பில் கலந்திங்கு வரும்பாடல் நின்செவியுள்
வண்டுண்ணும் தேனையூற்றும்
சிரியெந்தன் மகளே நின்திருவிழிகள் எனைக்காணச்
சிலிர்க்கின்ற உணர்வு போதும்
பறியென்றே காலமெனும் தேவனுனைப் பாதியிலே
பக்கத்தி லிருந் தகற்றி
முறியென்று நின்னழகுப் பேச்சிலுளம் நான் மயங்க
முன்நின்று பிரித்து வைத்தான்
தெறிஎன்று தந்தைகொளப் பாசமுயர் தேர்ச்சில்லை
திருகியுடைத் தரை வீழ்த்துவான்
குறிஎன்றும் வாழ்வரையைக் கொள்பவன் தனையிங்கு
கூப்பிட்டு விடவும்செய்வான்
எரிகின்ற நின்மனதின் இடர்தாரும் சினந் தணியின்
இதில் மிச்சம் இன்பமாகும்
புரிகின்ற வரைதானும் புகைகொண்டு காணும்மனம்
பொய்யுள் வாய் மைமறைக்கும்
விரியுந்தன் சிறகுகளை விண்ணேறிப் பறக்கின்ற
விதமாக நீயும்காணும்
சரியென்னும் நம்பிக்கை தவறாதென் மீதெழுமின்
சற்றும் துயரற்றுப்போகும்
வளைகொண்ட நண்டுதனும் வழிமீது நடக்கையில்
வழமைக்கு மாறிஓடும்
சுளைகொண்ட பழமான தேன்சுவைப் பலாக்கனி
சுற்றிக்கை தொட முள்ளாகும்
விளைகின்ற பசி நீக்க வெளித்தோற்றம் மறுத்தாலும்
விரித்துபார் பொய்யுள் மெய்யாம்
மழை தூற வெயில்காண வரும்வான வில் அல்ல
மகளே நாம்வாழவேண்டும்
Subscribe to:
Posts (Atom)