மலராத மலரெங்கும் உளதோ - மறுபடியும்
புலராத விடிகாலைப் பொழுதோ - மதுமலரில்
உலவாத வண்டினமெங் குண்டோ உயிருடலை
விலகாது தமிழ்காத்தல் தவறோ
தொடராத நிழல் தானும் உளலோ - மரம்மீது
படராத கொடி வளரத் தகுமோ - பின்னாலே
இடராக வந்த பெரும் பகையோ - இவர்வாழ
விடலாமோ எம்தீழம் பொதுவோ
கடலோடிச் சூழ்நிலமும் எமதே - இதைவந்து
தொடலாமோ அந்நியனை விடவோ - மெய்கீறி
குடலாக இவன் உருவ சடமோ - நம்விழியில்
படலாமோ விடநாமும் முடமோ
அறமின்றி அநியாயம் பலமோ- அடிமையென
மறமின்றித் தமிழ் மாந்தர் கெடவோ -கொண்டகுவை
துறவென்று மனை விட்டு செலவோ- வந்தபகை
உறவென்று நிலம்கொள்ளல் தகுமோ
சுடும் தீயில் வெந்தழியும் வாழ்வைப் - புதிதாக்க
எடுஎண்ணம் உயிராய் மண்நேசி - இன்றுவிடில்
வடுவாகும் உனது பெருவாழ்வும் - கடமைதனைத்
தொடுவீரமொடு விடியல் தோன்றும்
No comments:
Post a Comment