Friday 19 July 2013

அந்தமும் ஆடிவருதோ?

மரணத்தேவன் அழைக்கின்றான் - என்
மனதுள் கீதம் படிக்கின்றான்
இரவும் பகலும் சுமக்கின்றேன் - அவன்
எழுவான் திசையில் விழிக்கின்றேன்
பரவும் நோயைப் பெருக்கின்றான் - தன்
பாதம் கொண்டே உதைக்கின்றான்
தரவும் துயரை வகுக்கின்றான் - என்
தவிப்பில் இன்பம் களிக்கின்றான்

வானம்மீது மஞ்சள் நிலா - முகில்
வந்தே மூடச் சென்றதில்லா
தானம் மிருளில் தடதடப்பு - கருந்
திசையாம் எங்கும் ஒளிமறுப்பு
ஏனம் மழையோ இடைத் தோன்றல் - அதில்
ஏறும் மின்னல் ஒளிச்சீற்றம்
ஓ..நம் உயிரைத் தேடுகிறான் - இவ்
உலகை சீண்டி உளம்சிலிர்த்தான்

பூக்களை வாரி இறைப்பவர் யார் - அப்
போகும் வழியைத் திறப்பவர்யார்
தீக்கல் எரிந்தே சிதறுவதேன் - அத்
திங்கள் மங்கித் தேய்வது ஏன்
பாக்கள் பாடும் தேவதைகள் - தம்
பனிநீர் வழியும் விழியூடே
ஆ..க்கள் ளுண்ட அரைவிழியில் - எனை
அன்போ டழைக்கும் வகையென்ன

ஆண்டவன் அருகில் நிற்கின்றான் - என்ன
ஆணவமென்றே நகைக்கின்றான்
ஆண்டவன் புவியிடை பாவங்களே - நீ
அன்பினைப் படியெனச் சிரிக்கின்றான்
ஆண்டவன் எத்தனை அறியானோ - நான்
அனுபவித் துழன்றவை விதிதானோ
ஆண்ட வன்அரசுடை நிலைதானோ - இதில்
ஆனந்தம் இழந்தவை நிழல்தானோ

தீமழை யாகப் பொழிகிறது - அதில்
தேகமும் கருகிக் காண்கிறது
வாமனதெடு கொள் விரைந்தோட்டம் - என
வழிதனில் பளபள ஒளியூட்டம்
போமனிதா எனும் உயிர்வாட்டம் - இனும்
பிறவித் தோழமைப் பிரிவேக்கம்
பூமணம் சூழலில் விழிமயக்கம் -அதில்
பொன்னொளி கூடல் புதுவாக்க

No comments:

Post a Comment