Monday 22 April 2013

வாழ்வின் வண்ணம்


சொல்லெண்ணம் சொல்விதம் இன்பந்தரும் அதில்
நல்லெண்ணம் பின்னிடின் நன்மைவரும்
சொல்லெண்ணம் கல்லென்னும் வன்மைகொளின் - அது
எல்லையில் துன்பங்கள் தன்னைத் தரும்

பல்வண்ணம் கொண்டுள்ளம் பார்த்துநிற்கும் - அது
இல்லெனும் அன்பினில் ஏற்றமுறும்
வெல்லென வாழ்வினில் வேகம் வரும் - எழும்
தொல்லைகளில் அதுசோர்ந்துவிடும்

கல்லென்ன மாமதி கற்றொழுகும் - பல
நல்லனக் கற்றிட மெல்லஎழும்
செல்லெனும் வல்லமை சேர்ந்துவிடும் - உள்ள
புல்லெனும் கேடுகள் நீங்கிவிடும்

சல்லெனச் சத்தமிட்டோடும் நதி - அதில்
சில்லெனும் காலையின் நீர்க் குளிர்மை
நில்லென்னும் சூரியப் பொற்கிரணம் - எனக்
கொள்ளதி இன்பங்கள் கோடி பெறும்

செல்லன்ன நல்லெழில் சோலைகளுக் கதில்
மெல்லெனப் பூ விரி காட்சிகளும்
பல்லன்னப் பட்சிகள் நீந்துமெழில் கொண்ட
துல்லிய நீர்ச்செறி ஓடைகளும்

இல்லென வேளை என்றோதல்வீட்டு வாழ்வை
வில்லென நீவளைத் தெய்து விடு
வெல்லென  எண்ணித் துயர் கவிய நீயும்
கொல்லென தான்துயர் ஓட்டிவிடு

புல்தன்னில் நீர்துளிப் போர்வை கொள்ள- காலில்
இல்லென வெற்றடி பாதம்வைத்து
மெல்லெனப் புல்மிதித் தோடிநட அதி
சொல்லொண்ணா இன்பமும் தோன்றுமன்றோ?

No comments:

Post a Comment