Sunday 30 November 2014

நடந்திடு நேரே !

நடக்கின்ற பாதைமீது 
.. இடர்க்கென்று முள்ளிருக்கும்
  அட’க்கண்டும் அல்லல் கொள்வதோ
தடக்கென்று கல்லை வைப்பார் 
.  நடக்கின்ற வேளைதன்னில்
.  கடக்காமல் தடுக்கி வீழவோ
அடக்காமல் சினமெடுக்க 
.  முடக்காமல் எதையும் செய்து
.  விடக்காலமென்னசொலுமோ
இடக்காலும் வலக்காலும் 
.  உள்ளம் சொல்ல போகுமங்கு
.  தடுக்காமல் கண்கள் கூறுமோ

குடத்தினுள் வைக்கும்தீபம் 
.  இடத்துக்கு ஒளிர்வதில்லை  
.  கிடக்கட்டும் என்று விடுவதோ
கடக்கின்ற முள்ளும் கல்லும் 
.  படத்தன்னும் உள்ளம்நோகும்
.  தடங்கற்கு ஏதுசெய்யவோ
விடங்கக்கும் அரவம் உண்டு 
.  விதியுமுண்டு தீண்டவந்தால்
.  சடமென்று ஆக்கவிடுவதோ
அடங்கென்று அவதியுற்று 
.   நிறங்கெட்டு உருவம்கெட்டு
.   தடமின்றி முற்றும்போவதோ

சுடர்கண்டு கடகடென்று 
. மடல்தன்னை மலர்விரிக்கும்
. உடம்புள்ளும் இதயமுண்டன்றோ
திடங்கொண்டு தெய்வம் வேண்டு 
.  நடந்திடும் மலர்வு நெஞ்சில் .  
.  புடம் செய்து பொன்னொளிர் வதாய்
முடமென்ற எண்ணமின்றி 
.  முடியுமென்று கொள்ளூ யாவும் 
.  படக் காணுமுந்தன்.கையிலே
கடமைகள் தன்னியெண்ணிக் 
.  கடும்வேகம் கொண்டு மேகு
.  கெடும் தீது நன்மை பொங்கவே

No comments:

Post a Comment