Sunday 30 November 2014

உலகம் பலவண்ணம்

மனமதில் தெளிவுறு மகிழ்வுடன் பழகுவர் 
 முகம் மனம் எதிரிருக்கும்
கனமென நினைந்தொரு பொதியினைப் பொன்னெனப்
பிரித்திடக் கல்லிருக்கும்
வனமதின் தேவதை வருமெனும் நினைவுகள் 
  வலிஎழத் தீதும்வரும் 
தினமது தொடுமுனைத் தென்றலும் மறுகணம் 
  திரிந்திடும் புயலடிக்கும்

கனவுகள் எனநினந் தழுந்திடும் செயல் சில 
  கண்முன்னே நடந்து கொளும்
தனமென நிலமிடை புதையலும் வருமென 
  தலைவிதி வேறிருக்கும்
சினமெனக் கொள்வது சிலருக்கு உள்ளத்தில் 
  சிறுமையில் பெருமைதரும்
புனலிடை வலையெனப் போடுவர் பிடிபடப் 
  போவது உயிர் கணக்கும்

அனலிடை பொன்நிகர் அனுதின முதவிடும் 
  அறிஞரும் இடையிருப்பர்
தனதென நலமதை தாங்கிய மனமின்றித் 
  தருதலில் நிறைவுகொள்வர்
சனமென நடந்துடை சம நிலைஉருத்தென  
  சகலதும் பகிர்ந்தளிக்கும் 
உனதயல் பலசில உலகத்தில் சிறப்பெனும்
   உத்தமர்களு மிருப்பர்

நினதிரு விழிசொலும் வழிதனில் செலமுதல் 
  நிலைதனை மதியறிவாய்
என பெருங் குணமெடு எழுந்திடு பகுத்தறி 
 வெனும் வழிநடந்துவிடு
பனைமர அடியொடு பாலுண்ணப் பழகுதல்
  பலசிர மங்களையுந் தரும் 
நனவுகள் அதில்சில கனவுகள் எனின்உளம்
  நகைத்திடு நலனையெடு!

No comments:

Post a Comment