Sunday 30 November 2014

தவறுகள் மலியும் தருணம்

அலைந்திடும் மனமதில் அலைகடலெனு மொரு
அவதியும்  உருவாகும்
கலைந்திடும் கனவுகள் கடுதியில் மறைவது
கவலையை உருவாக்கும்
குலைந்திடும் உறவுகள் கொடுமையென் பிரிவது
குமுறலை தரும் நாளும்
சிலையெனும் மனமதில் சிறுமையின் இழிவெழச்
சீற்றமும் எழுந்தாடும்

வலைதனில் புகுங்கயல் வாழ்விழந்திடத் தாய்
வீரிட்டு அழமோசை
விலைதனைக் பழியென வெறிகொண்டு எழுவது
விடைசொலும் செயலாகும்
கொலைசெயத் தினதினம் கூடியும் மனிதர்கள்
கொஞ்சிடும் ஆழிமகள்
நிலை கொண்ட குழந்தைகள் நெஞ்சழ பிரிப்பது
நினைவதில் துயர்விளைக்கும்

தினம்தினம்பொங்கியே துடிக்கின்ற கடல், மதி 
தேய்வதை சகிக்காதும்
மனமதில்.மகிழ்ச்சில் பொங்கிட எழுச்சியை  
முழுமதி வரப்; பெறலும்
வனமதில் கொடிமலர் வருமணம் எழும்வகை
வருடிய தென்றலொடு,,
இனமதில் ஒருத்தியின் இயற்கையின் குழந்தைகள்
என விதி இருந்திடவே

மனிதரின் செயலினில் மலிந்திடத் தவறுகள்
மலையெனப் பெரிதாயின்
புனிதமும் கெடப்  பெரும் புய லெனத் திரிவது
படைத்தவள் செயலாகும்
தனில் கொண்ட மனதினிற் தகிப்பில்லை தமிழ்சொலத்
தவறுகள் எனக்கூறின்
பனிப்புயல் கொடுமனல் குமுறிய விண்ணுறை
பெருமன்னை செயலாகும்

No comments:

Post a Comment