தேடிப் பார்த்தேன் திக்கெட்டெங்கும்
தெரியா விடைகொண்டேன்
ஓடிக் கேட்டேன் ஓடைநீரில்
உலவும் அலை கேட்டேன்
நாடிக் கேட்டேன் நாளும் மலரும்
நல்லோர் எழில்பூவும்
வாடிக்கீழே வீழுந் தன்மை
வகையேன் விடைகேட்டேன்
கூடிக் கைகள் கூப்பித் தெய்வக்
கோவில் உள்நின்றேன்
ஆடித்தெய்வம் முன்னே நின்று
அருளே விடைஎன்றேன்
மூடிக் காதில் மொழிகள் அறியா
மௌனத்தில் கேட்டேன்
சாடிப் பார்த்தேன் தெய்வம்மீது
சலனம் எதுகாணேன்
சூடிக் கொண்டோன் பிறையைக் கேட்டேன்
சோதிக் கனலாகி
வேடிக் கையாய் உலகம் சுற்றும்
வெயிலை விடைகேட்டேன்
பாடிக் கேட்டேன் பாரில் தோன்றும்
பருவந் தனைக்கேட்டேன்
சோடிக் குயிலைக் கேட்டேன் சுற்றும்
காற்றை விடைகேட்டேன்
நானாய் இன்றும் கண்டேன் நாளை
நானும் என்னாவேன்
தேனாய் மொழியும்பேசித் திடமும்
திகழும் மனங்கொண்டேன்
கூனாய் குறுகிக் கோலும்கொண்டு
கிடந்தும் உழன்றேன்பின்
தானாய் எரியும்தீயில் வேகுந்
தருணம் என்னாவேன்
நெஞ்சில் கொண்டேன் நினைவாம் ஆற்றல்
நிர்க்கதி யாய்போமோ
அஞ்சா வீரம் அகந்தை தோல்வி
அலையும் சிறு உள்ளம்
கொஞ்சல் கோபம் கேளாத் தன்மை
கொண்டோர் பிடிவாதம்
பஞ்சம் பாடு பலவும்கண்டேன்
பனியென் றழிவாமோ
வெள்ளை நிறமும் விடிவான் செம்மை
விளங்கும் ஒளிகண்டேன்
கொள்ளை எழிலார் குழலாள் மங்கை
குலவும் சுகம் கொண்டேன்
பிள்ளைமேனி பிறப்பும் கொண்டோர்
பிணைப்பும் இவையாவும்
தெள்ளத் தெளியும் வகைபோம் இடமும்
தெரியாப் போமாமோ
எங்கும்மௌனம் இழைந்தோர் அமைதி
எதுவும் நிசப்தம், வான்
தங்கும் கோளத் தரையும் மௌனத்
தணலைச் சுழன்றோடும்
கங்குல் இடையே கனத்தோர் வெடியும்
கரையும் ஒளிவெள்ளம்
மங்கும் வகையும் கண்டேன் எண்ணம்
மயங்கும் விடைகாணேன்
மனங்கொள் நினைவும் மதியும் ஆற்றல்
மகிழ்வும் கண்டோம் நாம்
கனங்கொள் உணர்வும் கற்பனை கொண்டும்
காலம்பல ஆண்டாய்
சினம்கொள் விடிவும் சீற்றம் என்றே
சேர்த்தே சிறுவயதின்
நினைவும் கொண்டோம் நீங்கும்போதில்
நெஞ்சம் என்செய்யும்
தெரியா விடைகொண்டேன்
ஓடிக் கேட்டேன் ஓடைநீரில்
உலவும் அலை கேட்டேன்
நாடிக் கேட்டேன் நாளும் மலரும்
நல்லோர் எழில்பூவும்
வாடிக்கீழே வீழுந் தன்மை
வகையேன் விடைகேட்டேன்
கூடிக் கைகள் கூப்பித் தெய்வக்
கோவில் உள்நின்றேன்
ஆடித்தெய்வம் முன்னே நின்று
அருளே விடைஎன்றேன்
மூடிக் காதில் மொழிகள் அறியா
மௌனத்தில் கேட்டேன்
சாடிப் பார்த்தேன் தெய்வம்மீது
சலனம் எதுகாணேன்
சூடிக் கொண்டோன் பிறையைக் கேட்டேன்
சோதிக் கனலாகி
வேடிக் கையாய் உலகம் சுற்றும்
வெயிலை விடைகேட்டேன்
பாடிக் கேட்டேன் பாரில் தோன்றும்
பருவந் தனைக்கேட்டேன்
சோடிக் குயிலைக் கேட்டேன் சுற்றும்
காற்றை விடைகேட்டேன்
நானாய் இன்றும் கண்டேன் நாளை
நானும் என்னாவேன்
தேனாய் மொழியும்பேசித் திடமும்
திகழும் மனங்கொண்டேன்
கூனாய் குறுகிக் கோலும்கொண்டு
கிடந்தும் உழன்றேன்பின்
தானாய் எரியும்தீயில் வேகுந்
தருணம் என்னாவேன்
நெஞ்சில் கொண்டேன் நினைவாம் ஆற்றல்
நிர்க்கதி யாய்போமோ
அஞ்சா வீரம் அகந்தை தோல்வி
அலையும் சிறு உள்ளம்
கொஞ்சல் கோபம் கேளாத் தன்மை
கொண்டோர் பிடிவாதம்
பஞ்சம் பாடு பலவும்கண்டேன்
பனியென் றழிவாமோ
வெள்ளை நிறமும் விடிவான் செம்மை
விளங்கும் ஒளிகண்டேன்
கொள்ளை எழிலார் குழலாள் மங்கை
குலவும் சுகம் கொண்டேன்
பிள்ளைமேனி பிறப்பும் கொண்டோர்
பிணைப்பும் இவையாவும்
தெள்ளத் தெளியும் வகைபோம் இடமும்
தெரியாப் போமாமோ
எங்கும்மௌனம் இழைந்தோர் அமைதி
எதுவும் நிசப்தம், வான்
தங்கும் கோளத் தரையும் மௌனத்
தணலைச் சுழன்றோடும்
கங்குல் இடையே கனத்தோர் வெடியும்
கரையும் ஒளிவெள்ளம்
மங்கும் வகையும் கண்டேன் எண்ணம்
மயங்கும் விடைகாணேன்
மனங்கொள் நினைவும் மதியும் ஆற்றல்
மகிழ்வும் கண்டோம் நாம்
கனங்கொள் உணர்வும் கற்பனை கொண்டும்
காலம்பல ஆண்டாய்
சினம்கொள் விடிவும் சீற்றம் என்றே
சேர்த்தே சிறுவயதின்
நினைவும் கொண்டோம் நீங்கும்போதில்
நெஞ்சம் என்செய்யும்
No comments:
Post a Comment