Thursday 20 February 2014

மயிலாடக் குயில்பாட!

நீலமலை மீதிருந்து கூவுங் குயிலே இன்று
நேர்ந்த தென்ன வாடுவதேன் கூறுகுயிலே
பாலதை பொழிந்துமந்த வானின் நிலவே - காணப்
பார்த்திருந்தும் ஆவதென்ன பாடு மகிழ்வே
கோலமீது கொண்டதென்ன கூறு குயிலே இன்று
கோடிசனம் ஆடிமகிழ் வாகுந்தினமே
ஆலமரம் மீதிருந்து ஆடும்கிளையே அதில்
ஆனந்தமும் கொண்டுநீயும் பாடு குயிலே

கூடுவிட்டு ஓடி வந்தேன் கொள்ளு மயிலே - எந்தன்
கூட்டமும் தவித்தடி கொல்லவரவே
ஓடு என்று கூறினராம் உண்மை மயிலே [ கையை
ஓங்கியும் அடிக்க வந்தார் உள்ள செயலே
தேடு என்று கூறுவாராம் எந்தனயலே - அந்த
தீங்கனிக்கு ஏதுதிசை உள்ளமறியேன்
நாடு என்று கூறும் மனம் கொண்டநிலையே சென்று
நாலு திசை பாட வழி இல்லை மயிலே

சூடு என்று சுட்ட வெயில் கொண்டும் குயிலே -இன்று
சொல்ல வழி இன்றி நிற்பதேது குயிலே
கோடு கிழித்துள்ளிருத்தி கண்டநிலையே - இதில்
கோணலிட்டு நீ குனிந்து வாழும் வகையேன்
காடுமுண்டு பக்கத்திலே கானக்குயிலே - அங்கு
கற்பனைச் செடிபரந்து காணுமின்பமே
வீடு விட்டு வந்தவிதி விட்ட செயலே- இந்த
வேளையில் மறந்து கீத்ம் பாடு குயிலே

தேடுமாம் விழித்து மந்த திக்கில் சிலரே - என்ன
தேவையோ பறந்தபோது தீங்கு விளைந்தே
காடுமா மலைவிழுந்த பூவென்றானதும் - இந்த
காலையில் கனவில்வந்து காணுதே நிலை
பீடுங் கொள் பிணி பரந்து போனபின்னதே - நானும்
பேசவோ பெருத்ததீயும் பின்னெரிந்ததே
கூடுடன் அன்றான வாழ்வு கொள்வ தாயின்விண்- கொண்ட
கோலமா சுதந்திரத்தைத் தேடும் வழியே !

1 comment: