ஆடுவாள் அசைவாள் ஆனந்தமாக
ஆனாலும் அழகுபோகாள்
தேடுவாள் சிரிப்பாள் தென்றலில் மணப்பாள்
தீந்தமிழ்ப் பாடலாவாள்கூடுவாள் களிப்பாள் குழந்தைபோல் சேற்றில்
கொண்டே கால் வைத்துநின்றாள்வாடுவாள் ஒருவன் வந்தபின் சென்றால்
வழிபார்த்து முகம் வாடுவாள்அலைந்தவள் ஒருத்தி அசைகின்ற நளினm
அகமென்றும் அமைதியற்றாள்தேங்குவாள் திரிவாள் திசையென்று கொள்ளாள்
தேடியும் ஏதும்காணாள்ஒங்குவாள் விழுவாள் உயிர்போவதன்ன
உறுமியே வெள்ளைமண்ணில்தாங்கவே வீழ்ந்து தரைபுரண் டடங்கிதன்னகம் திரும்புவாளாம்இல்லை யென்றாலும் இரவெல்லாம் வாடி
இன்னுமோர் பெண்ணொருத்திதொல்லையும் தந்து தொட்டவன் ஓடித்தொலை சென்றபோது ஏனோஅல்லதும் எண்ணி அனுதினம் நொந்து
அரைமேனி ஆகிநிற்பாள்வல்லமை கொண்டாள் வண்ணமோவட்டவடிவெனும் திருமுகத்தாள்நேரிலே வந்தாள் நெஞ்சோடு நிற்பாள்நல்லுயிர் காத்து நிற்பாள்கார்காலம் தண்மை கடுவெயில் வெம்மைகாணும்தன் நிலைமாற்றுவாள்பேரிலோ இளையாள் பெரிதெனும் மனதால்பேசிடும் கதைகள்கூறிதேர்போலும் அசைவாள் தெருவெங்கும் திரிவாள்தேடும் நல் மணம்கொடுப்பாள்
1. தாமரை 2.அலை (கடல் அலை) 3 நிலவு 4.தென்றல்
No comments:
Post a Comment