Tuesday 11 June 2013

தா வீரம் தாயே!

தேன் சுவைத்த நா திகட்டிப் போனதுவோ - அன்றி
நான்குடிக்க ஊற்றுந்தமிழ் நலிந்தனவோ
மீன்பிடிக்கப் போடும் வலை வீழ்வதென்ன - இன்று
ஏன்துடித்துக் காணுதிந்த ஏழைமனம்

தேள்கடிக்கக் காலருகில் வைத்தனனோ - அன்றி
வாள்பிடித்த கைவளத்தில் நின்றனனோ
தூள்பறக்கச் சாம்பலிடும் தீயெழுந்தே - இந்த
நாள்தனுக்கு மேல்நிலைக்கக் காரணமென்

ஏழையிவன் கணக்கெழுத ஏடில்லையோ - ஆயுள்
கூழையென்று தான்முடிக்கக் கூடுதுவோ
வாழை யிவன் ஈந்தகனி தீர்ந்தழிவோ - ஓர்
பேழைதனும் ஆறடிக்குப் பூரணமோ

தூறும் மழையூடு மின்னல் காணுதய்யா - தூர
ஏறுமிருள் வான்பிளந்தும் ஆடுதய்யா
மாறுநிலை என்றுமனம் வேகுதய்யா - ஆயின்
கூறும்விதி கோலமென்று நோகுதய்யா

பேதலித்துக் கொள்ளுமனம் பொய்மையிலா - அன்றி
ஆதரித்த சக்திமனம் போதுமென்றா
காதருகே கவிபடித்த வாழ்விருந்தே - எனை
ஓதரும்பொற் தமிழ் பிரிக்க உற்றதென்ன

நாளிருக்கு தின்னும் என்னை நாடுவிட்டே - உந்தன்
தாளிருக்கும் பக்கம்தலை வைத்திடென
கேளிருக்கும் நாட்களிதைக் கேடுசெய்யா - நீயும்
தோளிருக்கு முரம்பலக்க செய்திடம்மா

No comments:

Post a Comment