Friday 14 June 2013

விளையாட்டுத் தொல்லை

என்தம்பி என்அன்னைக் கோர்செல்லப் பிள்ளை
இளமையில் தமிழன்னை தனைவேண்டி அன்பை
தன்னென்று கொள்ளவும் தமிழ்வந்துமுன்னே
தரை வீழும் மழை என்று நனைகின்ற தென்ன
பின்னும் தமிழ்பேசும் பெரியோரின் முன்னே
பிழைகொண்டு தமிழ்பாடும் மழலைக் குழந்தை
இன்னும் நற்கலைவண்ண எழில்பூத்த  சோலை
இதிலாடிக் களிக்கின்ற இவன் செல்லப் பிள்ளை

பள்ளிக்குச் செல்லாத பாங்கோடு  நின்றும்
பருவத்தே பயிர்செய்து வளம்காணும் பிள்ளை
அள்ளித்தா என்றாலும் அள்ளியே தருவான்
ஆகா இனிப்பென்றால் அதனையும் இடுவான்
துள்ளித்தான் ஓடுவான் தொலைதூரம் செல்வான்
தீந்தமிழ்ப் பாட்டொன்று தினம்கொண்டு வருவான்
கள்ளத்தனம் ஏதும் கொண்ட நெஞ்சில்லை
கற்பனை மட்டும்தான் காண்கின்ற தொல்லை

எண்ணத்தில் எண்ணற்ற எண்ணுவான் இன்னும்
இல்லையென்றால் அங்கு இருக்குதா மென்பான்
வண்ண த்தில் பேச்சாயும் வார்த்தையில் ஜாலம்
வைத்து ஒன்றுள்ளதை இல்லை யென்றாவான்
திண்ணம் இதோ சொன்ன பொய்தானே என்றால்
பொய்யில்லை அன்றுண்டு இன்றில்லை யென்பான்
கண்ணுக்குள் காண்பதோ கனவென்ற கோடி
கற்பனைகள் நிஜமென்று கதைகூறும் சேதி

மண்ணாக பொன்மேனி மாறு என்று வந்தால்
மகனென்று தாயிடம் கரமேந்தி நிற்பான்
எண்ணெண்று எண்ணாமல் தந்தாள் நிறைந்து
இளமைக்கு ஒருபிடி உரம்கொண்டு சேர்ப்பாள்
அண்டத்தைக் காக்கின்ற சக்தியின் பிள்ளை
அதனாலோ தீகொண்டு எரிகின்ற உள்ளே
மண்மீது வாழ்நாளில் செய்பாவம் தானோ
மலருக்கு தேனின்றி தீசுட்ட மெய்யோ

No comments:

Post a Comment