Friday 14 June 2013

மாற்றங்கள்

செழுமடி வானறு கொடுமழல் மேலிடை
விழும்பொழு தெழுமதி போலும்
பழுவடு மாவிடை பிளகனி போலினி
எழுமொரு வாழ்வது வேண்டும்
குளமிடை நீந்திடு வலையிட தான்பிடி
படுமுயிர் தான் படும்பாடும்
உளமதுநோபட  உணர்வதுதேய்பட
உரிமைகள் குழியிடை மூடும்

மனமது மாஇருள் தொடுமடர் காடிடை
வருமுணர் வாகியபோதும்
கனவது நாளொரு தினமதில் பூத்திடும்
இனமென போய் விரிந்தாடும்
நனவினில் தேன்மழை பொழிநிலையாவது
எமதிடை மனமெடு ஞானம்
சனமுமாகிட விடிவெள்ளி தோன்றிடும்
சகலதும் சுதந்திரம் காணும்

முதுமலை மேவிய மழைமுகில் தூறென
விழிபொழி நீரெழும் போதும்
புதுமலர் தூவிட பெரிதெனும் வீரமும்
அது தர விடிவெழும் காலம்
எதுகுறை தாவியே பலதிசை ஓடிய
எமதவர் கூடிடவேண்டும்
இதுநிறை வேறிட எழுவது வீரமென்
றியல்பிடும் மாற்றங்கள் வேண்டும்

No comments:

Post a Comment