Friday 14 June 2013

மிடுக்காய் எழுவோம்

மீண்டும் தொடங்கும் மிடுக்காய் -பெரும்
மின்னல் இடியென திடமாய்
ஆண்டும் எத்தனை காத்தோம்- இனி
ஆனந்த பூமியைக் காண்போம்
வேண்டும் நமக்கொரு வாழ்வு - இதை
விட்டால் மனிதமும் ஏது
தூண்டும் உணர்வுகள் பொங்க - நீ
தூக்கம் மறந்தினி திரள்வாய்

தீண்டும் மனதினில் தெய்வம் அது
தீரம் மனதிடை சேர்க்கும்
சீண்டும் எதிரியைக் கேட்போம் -எச்
செல்லும் திசையென பார்ப்போம்
கூண்டுக் கிளியென வாழ்வு - இக்
இக் குவலயம் வெளிதனில் மீட்பு
தாண்டும் படிகளும் நூறு இது
தாவும் வேங்கையின் நாடு

No comments:

Post a Comment