Tuesday 25 June 2013

தீப் பொறி

பயிரென்ப நீருண்டு மண்ணோடு சேர்ந்து
பசுமைகொண் டுயர்வளர்ந் தோங்கும்
உயிரென்ப இறைதீயின் பொறியொன்று மேனி
இணைந்தின்ப வாழ்வென்றும் ஆகும்
கயிரென்று பிணைக்கின்ற வகையாகும் பாசம்
கடலென்றே எமை மூடினாலும்
தயவென்று தான்சக்தி அவளேற்றிப் பாடு
தரும் வாழ்வில் படகென்ற மீள்வு

நிலம்மீது நின்றாலும் சுழன்றோடும் பூமி
நிலைபோலும் நாம் கொண்ட வாழ்வும்
அலைகின்ற தென்றாலும் அகங்கார எண்ணம்
அதைமேவி இருள்கொண்டு மூடும்
வலைகொண்டே நாமள்ள வரும்மீனைப்போலும்
வரையின்றி கோபங்கள் தாபம்
தலைகொண்டு ஒளிமங்க புலனாசை தூண்டும்
தவித்தோடி செய் துன்பமாகும்

உலகென்ற துருவாக்கும் இறைசக்தி அன்பால்
எரிகின்ற நெருப்பென்ற சூடு
பலம்கொண்டு தீபொங்கி வெடிக்கும் கண்ணூடு
பாய்ந்தோடும் எரிகுன்றின் நீறு
நிலந்தானும் நீள்வானம் பேரண்டமெங்கும்
நெருப்பொன்றே நிறைசக்தி யாகும்
கலங்காதே உன்மேனி தீகொண்டபோது
காணும் உன் னுயிர்சக்தி யோடு

அன்னை கொண்டா ளந்தத் தீகொண்ட வெம்மை
அகங்காணும் ஞானத்தின் செம்மை
இன்னும் உன்னுடல்மீது சுடுகின்ற தேது
இது இன்றில் பிணமாகும் கூடு
தன்னாசை சிற்றின்ப தணிவென்ற தோடு
தகர்வாகும் உடலென்றபேறு
பொன்னாசை, பெண்ணாசை மண்ணாசை சுட்டு
புகழ்மேனி அழியும் பூப்போன்று

உள்ளத்தில் நல்லாசை நேர்மைக்கு பாதை
உருவாகும் அறம்கொண்டமேன்மை
கள்ளத்தில் மனம்நாடும் காட்டற்றுவெள்ளம்
கயமைக்கு துணைபோகும்நெஞ்சம்
வெள்ளத்தில் புகழோடு விளையாடி மோதி
விரயத்தில்உயிர்கொல்லும்யாவும்
அள்ளிச் சென்றாலும் உன் ஆத்மாவின்சோதி
அதுகாணும் அந்தத்தின் கூறு 

No comments:

Post a Comment