Friday 14 June 2013

கவிதையும் கற்பனையும்

கற்பனைகள் கவிதையென ஆகாவிட்டால்              
கட்டுரைகள் ஆகிவிடும் கவிதைஎன்றால்
சொற்பதங்கள் சிந்துநடை போடல்வேண்டும்
சொல்லடுகில் அற்புதங்கள் செய்தல்வேண்டும்
விற்பனையை கவிதையிலே காட்டல் என்றால்
விலைமதித்துப் புத்தகத்தை விற்றல் அன்றி
கற்றவகை இலக்கியங்கள் காணும் எல்லாம்
கற்பனையை விட்டதெனில் நிற்குமாமோ

தண்டலையில் மயில்கள் நடமாடிநிற்கத்
தாமரைகள் ஒளிவிளக்கு தாங்குதென்னில்
கண்டதுமென் கவிதையிலே கற்பனைகொள்
களிப்புறு சொல்லடுக்கிலிது காணுதாமே
வண்டினத்தை கண்களென இன்றாசொன்னோம்
வண்ணமுகம் நிலவுஎன்றே கவிதைசொன்னார்
அண்டங்காக்கா கண்ணில் மைதீட்டவா
அழகுமலர் மல்லிகையை அம்புலியேதா

என்பதனை விட்டொழித்தே இலக்கியத்தை
எடுத்தாளின் இன்சுவையை நீக்கியன்றோ
நன்பழுத்த மாங்கனியை உப்பிலிட்டு
நறுக்கிப் புளியிட்டபின் காரம்சேர்த்து
இன்பமென் றுண்ணென்றால் இல்லையென்பேன்
இனிப்பு எனில் அது இனிக்க இனிமைவேண்டும்
என்னளவில்  திசைமாற்றும் திருப்பமானால்
என்கவிதை கற்பனைகள் இழைந்துநிற்கும்

No comments:

Post a Comment