Tuesday 13 January 2015

கண்ணீர்!

ஆவென்றலறிய வேளையிலும் மனம் 
ஆனந்தம் கொண்டு திளைக்கையிலும்
பூவென்ற தாய் அள்ளிக்கொட்டுகிறாய் மழை
போலும் என்னில் வந்து சொட்டுகிறாய்
ஓவென்றே ஓடிபுயல் விளைக்கும் சத்தம்
உள்ளிருந்தே ஓசையாகிவிட
நாவொன்றும் சேதிசொல் லாமலேயே
நெஞ்சில் கொண்ட துன்பம் நீபகிர்ந்தாய்

கூவென்று கத்தி நடுநடுங்கி உளம்
கொண்ட வலிதனை நாவுரைக்க
சோவென்று கொட்டிச் சிலுசிலுத்தே உளம்
சோர்ந்து விடும் வகை நீபொலிந்தாய்
நோவென்றே உள்ளம் துடிதுடித்துக் கண்ட
நேர்மைவழி இன்னல் தீர்க்கவெனத்
தீஎன்று பூமிவெடித தனலைக் கக்க\
நீஅணைக்கும் மழையாய் விழுந்தாய்

போவென்றே உன்னை வெறுக்கவில்லை நினைப்
புன்னகையால் வெல்லும் நோக்கமில்லை
ஆ! வென்று ஆடிக் கூத்தாடி   ஆனந்திக்க
அன்னை சுதந்திரம் கொள்ளவில்லை
ஏவேடம் போட்டவ ருள்ளதினால் இன்னும்
எங்கள்திசைகாணக் காலையில்லை
’;போ வென்று வா’ எனக் கூறுமுள்ளம் உன்னில்
பின்னிற்பதேன் வீரம் காணவில்லை

தூவென்று துச்சமென்றே நினைத்து போரில்
தானின்று வந்தவன் மேனியிலே
கோவென்றே ஆயினும் கொள் விழுப்புண் வெங்
காயமெடுத்து  சிவந்தநிலை
தேவி திரௌபதியின் சேலையென அந்தச்சின்ன
வெங்காய மதை நானுரிக்க
நீவந்து மெல்லக் கசிந்ததென்ன கண்ணில்
நீலம் சிவந்தடி வானம் என

****************************

No comments:

Post a Comment