Sunday 11 January 2015

அன்பு உயிரின் சக்தி!


அன்பு என்னும் வீணை ஏந்தி 
உள்ளம் மீட்டவும்
இன்பமென் னிசை பரந்து 
கொள்ளும் வாழ்விலே
துன்பமென் நிலைகடந்து 
தெய்வ ஜோதியே
உன் மனத்தில்தோன்றியின்பங்
கொள்ளும் நாளுமே

அன்பு கொண்ட உள்ளம்காணின் 
இன்னல் தானதும்
இன்மை யென்றதாகி எண்ணம் 
ஏற்றம் கண்டிடும்
என்நிதம்சி னந்து கொள்ளும் 
தன்மை யாவுமே
மென்னிளம் மனம் மறைந்து 
மேன்மை கொள்ளுமே

அன்பெனும் நிலை பிழன்று 
வேறு வேறெனப்
பன்நிலைப் படுமன்போடு  
பக்தி காதலாய்
இன்னும்நேசம் பாசம் மோகம் 
இச்சை கொள்வதாய்
தன்மனத்தின் கட்டைமீறித் 
தாகம் கொள்ளுமே

பன்முகத் தினோடு  காணும்
போதும் காண் அதில்
அன்பினில் பிறக்கும் ஆசை
மோகம் வேட்கைகள்
தன்னிலை மறந்து பொங்கும்
தாண்டும் எல்லையை
அந்நிலை பிழன்று வன்மை
ஆக்கும் தீததே



******************

No comments:

Post a Comment