நீரினில் தீவந்து பற்றலாம்
நெஞ்சினுள் தீ பற்றிக் கொள்ளுதே
வேரின்றிப் பூமரம்வீழலாம்
விட்டுயிர் பூவுடல் வீழவோ
நேரின்றித் தெய்வமும கொள்வதும்
நீர்வற்றக் கண்ணீர் வடிப்பதும்
பாரினில் எம்மினப் பாடுதான்
பார் இதில் நீதியோ வேறுதான்
எங்களின் அன்பெனும் தெய்வமே
இன்னும் இதயத்தின் உள்ளேநீ
தங்கியிருக்கையில் தாங்குமோ
தாயே பிரிந்திடல் ஆகுமோ
பொங்குது கண்களில் நீரெல்லாம்
போதுமென்ற தினி இல்லைத்தான்
வெங்கனல் இட்டதாய் வாழ்வுதான்
வேகும் மனதென்றும் சோகம்தான்
போவது வாழ்வி லெல்லோரும்தான்
போகுமிடம் தெரியாதுதான்
ஆவதுஒன்றென ஆயினும்
ஆண்டவனே இது நேரமா
பூவது வாடிடும் மட்டும்நீ
பூமரத்தில் விட்டதில்லையே
நாவதுவற்றக் கதறினோம்
நாளிலெம் தாயைப் பறித்ததேன்
கூனியுடல்கொண்டவேளையா
கொண்டுநடந்திடப் பாரமா?
ஏனிங்கு கூற்றுவன் வந்தனன்
ஏதும்கேளா தன்னைகொண்டனன்
தானிதை நேர்மையென் றோதவா
தாங்கவில்லைத் துயர் பாரய்யா
மேனிதுடிக்குது கேளய்யா
மீண்டுமன்னை விழி காண்போமா
கோடிஒளிமின்ன வான்வெளி
கூடிஒன்றாடிடக் கோள்களும்
ஓடிச் சுழன்றிடப் பூமியும்
உள்ளே உயிர்களின் வாழ்வையும்
ஆடிநடம் புரிஆண்டவா
அத்தனையும் செய்தாய் வீணடா
நாடி அன்புகொண்டே வாழ்ந்திட
நல்லவரை விட்டதில்லையே !
நெஞ்சினுள் தீ பற்றிக் கொள்ளுதே
வேரின்றிப் பூமரம்வீழலாம்
விட்டுயிர் பூவுடல் வீழவோ
நேரின்றித் தெய்வமும கொள்வதும்
நீர்வற்றக் கண்ணீர் வடிப்பதும்
பாரினில் எம்மினப் பாடுதான்
பார் இதில் நீதியோ வேறுதான்
எங்களின் அன்பெனும் தெய்வமே
இன்னும் இதயத்தின் உள்ளேநீ
தங்கியிருக்கையில் தாங்குமோ
தாயே பிரிந்திடல் ஆகுமோ
பொங்குது கண்களில் நீரெல்லாம்
போதுமென்ற தினி இல்லைத்தான்
வெங்கனல் இட்டதாய் வாழ்வுதான்
வேகும் மனதென்றும் சோகம்தான்
போவது வாழ்வி லெல்லோரும்தான்
போகுமிடம் தெரியாதுதான்
ஆவதுஒன்றென ஆயினும்
ஆண்டவனே இது நேரமா
பூவது வாடிடும் மட்டும்நீ
பூமரத்தில் விட்டதில்லையே
நாவதுவற்றக் கதறினோம்
நாளிலெம் தாயைப் பறித்ததேன்
கூனியுடல்கொண்டவேளையா
கொண்டுநடந்திடப் பாரமா?
ஏனிங்கு கூற்றுவன் வந்தனன்
ஏதும்கேளா தன்னைகொண்டனன்
தானிதை நேர்மையென் றோதவா
தாங்கவில்லைத் துயர் பாரய்யா
மேனிதுடிக்குது கேளய்யா
மீண்டுமன்னை விழி காண்போமா
கோடிஒளிமின்ன வான்வெளி
கூடிஒன்றாடிடக் கோள்களும்
ஓடிச் சுழன்றிடப் பூமியும்
உள்ளே உயிர்களின் வாழ்வையும்
ஆடிநடம் புரிஆண்டவா
அத்தனையும் செய்தாய் வீணடா
நாடி அன்புகொண்டே வாழ்ந்திட
நல்லவரை விட்டதில்லையே !
No comments:
Post a Comment