Sunday 6 July 2014

இனியோர் பிறவி வேண்டாம்

சப்தமிட்டும் வானெழுந்த சக்தி . 
சட்டெனப் பரந்துமெங்கும் ஓடிக் 
குப்பெனப் பிடித்த தீயும் மின்னிக்
கொண்டதோ வெடித்த சத்தங்கூடி
இப்பெருத்த அண்டம் ஊது சக்தி
ஏகமாய் விரிந்ததென்ன காணீர்
வெப்பமும் வெதுப்புடைந்து தீயில்
விண்ணெனும் அகன்ற வேளை நாடி

அப்பனை அவர்க்குமேலே  ஐயன்
அங்கவர்க்கும் மூதை யானவர்க்கம்
இப்புவிக்குள் வைத்துஒட்டி நில்லென்
றெத்துணை விசித்திரங்கள் செய்தாள்
சொப்பனம் கொடுக்குமின்பம் போலே
சுற்றியும் மலர்கொள் சோலையாக்கி
தப்பெனும் நினைவெடுத்தும் கூடி 
தத்தியும் நடக்கும் பிள்ளை யாக்கி

வித்தை9கள் புரிந்த நாமும்கொள்ள
வேண்டியும் இருத்திவிட்ட தென்ன
அத்தையும் கொடுத்த மாமன் பெண்ணை
ஆசையில் இழுக்கும் கண்ணின்காந்தம்
இத்தரை விழுந்த வீர்மார்பும்
இச்சையில் உருண்டதாகக் காணும்
அத்தனைபொருள் பொன் மேனியாசை
ஆங்கெமக் கென்றீந்து மண்ணில் விட்டாள்

ரத்தி னச்செங் கம்பளம் விரித்து
ராஜமா நடை நடந்த போலும் -[
அத்தனை பொற்காசின் மோகம்கூடி 
ஆசையில் விளைந்த பெண்மைநாடி
புத்தியும் இழந்து பொய்மை பேசிப்
புல்லரித்துக் காண் சுகங்கள் மேவி
நித்திரைக்குள் போயிருண்டதாக
நேர்ந்திடு மிவ்வாழ்விலென்ன மீதி

சுற்றிலும் கருத்த பேய்கள் கூடிச் 
செய்யெனக் குரல்கொடுக்கத் தேடிப்;
பற்றியும் இழுத்து கொன்ற மாந்தர்
பாரிலே இவர்க்கு நாமம் வேந்தன்
கற்றலும் மறந்த கண்கள் ,மூடி
காணு,மிவ்  கொடுகோல் கையில் பற்றி
சிற்றுடல் சிதைக்க சேர்ந்துமாடி
செய்மனக் குரோத மன்னர் காணீர்

சித்தமும் கொண்டாடும் இன்பந்தேடி
சிந்தனை, குரங்கென்றாக மாறி
உத்தரிக்கவென்று பாவம்தேடி
உள்ளதும் நல்சக்தி விட்டு கூடி
சுத்தமும் மறந்தழுக்கை வேண்டி
சுந்தரன் எனக் கனத்தில் ஊறி
இத்தரை மறந்து போகும் நாளும்
என்றெனக் கென்றேதும் எண்ணமின்றி

கற்றதும் கரங் கொடுக்க வில்லை
கண்டதும் படித்த ஞானமில்லை
செற்களி லுரைத்த முன்னைச் சான்றோர்
சுட்டிடும் தீயென்ப கேட்கவில்லை
நற்குணம் நலிந்தவாழ்வில் கூடி
நர்த்தனன் தன்மங்கை மேனிபாதி
உற்றவன் உதைத்து மண்ணிலாட
ஓர்பிடிக்குள் சாம்பலாகும் செந்தீ

இத்தரை கொள்வாழ்வு மென்ன வாழ்வோ
எச்சுகம் நிலைத்திங்கு யாவும்
தித்திக்கும் எனச்சுவைத்த மாயை 
தென்றலில் விழுந்தலைந்த பூவை
ஒத்திடக் கிடப்பதென்ன வாழ்வில்
எத்தனை எடுத்தும் பாவம் உச்சம்
சத்தியம் இப்பாழ் கிடங்குப் பூமி
சுற்றிமீள் பிறக்கும் வாழ்வு வேண்டாம்

No comments:

Post a Comment